தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொழும்பிலிருந்து தொடம்கொட நோக்கிப் பயணித்த பாரவூர்தியொன்று 17ஆவது மைல்கல் அருகே விபத்துக்குள்ளானது.
பின்புற சக்கரம் கழன்று சென்றதால் பாரவூர்தி கவிழ்ந்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பருப்பு ஏற்றிச் சென்ற பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த விபத்தால் சம்பவ இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.




