நானுஓயா – கிளாஸ்கோ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பொன்னர் சங்கர் கூத்தின் இறுதி நிகழ்வின்போது, கம்ப மரமொன்றிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழந்தார்.
நானுஓயா – கிளாஸ்கோ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சுமார் 60 அடி உயரமான கம்பத்திலிருந்து தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் நுவரெலியா வைத்தியசாலைக்குக் கொண்ட செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நானுஓயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




