
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கான சான்றிதழ் பரிமாற்ற நிகழ்வு ஜூலை 16 அன்று பத்தரமுல்லையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், 5,171 மில்லியன் ரூபா பெறுமதியான சீருடைத் தொகை, சீன அரசின் அன்பளிப்பாக இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong ஆகியோர் பங்கேற்றனர்.
பிரதமர் தனது உரையில், சீனாவின் தொடர்ச்சியான உதவிக்கு நன்றி தெரிவித்து, 2026ஆம் ஆண்டுக்கான சீருடைகளுக்கும் உதவி கோரப்பட்டுள்ளதாக கூறினார்.
சீனத் தூதுவர் Qi Zhenhong, இலங்கையின் கல்விக்காக சீனா எப்போதும் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருக்கும் எனவும், இரு நாடுகளுக்கிடையிலான நட்பு தொடரும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சு மற்றும் சீன தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





