கொழும்பு, ஜூலை 18:
புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலான கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் உயரமான கடல் அலைகள் எதிர்பார்க்கப்படுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது.

அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடல் அலைகள் 2.5 முதல் 3.00 மீற்றர் உயரம் அடையக்கூடும் என்பதால், அலைகள் நிலத்தை நோக்கி தாக்கும் அபாயமும் நிலவுகிறது.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு, இந்த கடல் பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளைத் தவிர்க்க வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் வரை
  • கூடுதலாக, புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை கடற்பகுதிகளிலும் அவதானத்துடன் செயற்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடலுக்கு செல்வதற்கும், மீன்பிடிக்கச் செல்லவிருந்தவர்களும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடித்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.