பூச்சியுடன் உணவு விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனை

Date:

பூச்சியுடன் உணவு விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

கொள்ளுபிட்டிய பகுதியில் இயங்கி வந்த ஒரு உணவக உரிமையாளர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பூச்சி கிடந்த சோற்றை விற்பனை செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, மாளிகாகந்த நீதவான் லோசனா அபேவிக்கிரம வீரசிங்கவினால் 75,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், குற்றவாளிக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து அதனை ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

பூச்சியுடன் இருந்த ஃபிரைட் ரைஸை கொள்வனவு செய்த வாடிக்கையாளர் ஒருவர் கொழும்பு கொள்ளுபிட்டிய பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றம், முறைப்பாடாளருக்கு 60,000ரூபா இழப்பீடு வழங்க உணவக உரிமையாளருக்கு உத்தரவிட்டது.

கொள்ளுபிட்டிய சந்திக்கு அருகே உள்ள அந்த உணவகம், பொது சுகாதார பரிசோதகர் இண்டிகா பிடவெல தலைமையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் பின்னர் உரிய சட்டங்களை மீறியதாக கண்டறியப்பட்டு, உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....