Home இலங்கை பொரளை விபத்து – கைது செய்யப்பட்ட கிரேன் சாரதிக்கு கஞ்சா பயன்பாடு உறுதி!

பொரளை விபத்து – கைது செய்யப்பட்ட கிரேன் சாரதிக்கு கஞ்சா பயன்பாடு உறுதி!

பொரளை மயான சந்தியில் இன்று (ஜூலை 28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் சாரதி, கஞ்சா பயன்பாட்டில் இருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர் அதுருகிரியையைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

கிரேன் வாகனம், போக்குவரத்து சமிக்ஞை அருகே நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்கள் மீது மோதியது.

பிரேக் செயலிழப்பு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.