துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் வர்த்தகர் என தகவல்

Date:

பாணந்துறை – பின்வத்தை பொது மயானத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்க் கொல்லப்பட்டவர் கடவத்தையைச் சேர்ந்த 56 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் தனது வாகனத்தில் காலி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது உயிரிழந்தவர் கடவத்தை, கிரில்லவல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சம்பத் குடகொட என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடவத்தை நகரில் உள்ள வெளிநாட்டு மதுபானக் கடை ஒன்றின் உரிமையாளர் அவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் பாணந்துறை பின்வத்தையில் வீடு ஒன்றை நிர்மாணித்து வருவதாகவும், நிர்மாணப் பணிகளுக்குச் செல்லும் போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் காண, பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....