துருக்கி நிலநடுக்கங்களால் 34.2 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் – உலக வங்கி

Date:

கடந்த 06ஆம் திகதி துருக்கியில் பதிவான இரு பாரிய நிலநடுக்கங்களினால் 34.2 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மொத்த புனரமைப்பு பணிகளுக்காக செலவாகும் நிதி, இதனை விடவும் இரு மடங்காக அதிகரிக்கலாமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நிலைமை “உண்மையில் பேரழிவு” என ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான உலக வங்கியின் துணைத் தலைவர் Anna Bjerde தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கங்களினால் துருக்கியில் பதிவாகியுள்ள சேத மதிப்பீடு 34.2 பில்லியன் டொலர் என்பது 2021 ஆம் ஆண்டில் அந்நாட்டின் பொருளாதார உற்பத்தியில் 4 வீதத்திற்கு சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 06ஆம் திகதி துருக்கி மற்றும் சிரிய எல்லையில் பதிவாகிய 7.8 மற்றும் 7.5 மெக்னிடியூட் அளவிலான பாரிய இரு நிலநடுக்கங்களிலும் சிக்கி 44,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இரு நிலநடுக்கங்களையும் தொடர்ந்து 7,500 இற்கும் மேற்பட்ட அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...