துருக்கி நிலநடுக்கங்களால் 34.2 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் – உலக வங்கி

Date:

கடந்த 06ஆம் திகதி துருக்கியில் பதிவான இரு பாரிய நிலநடுக்கங்களினால் 34.2 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மொத்த புனரமைப்பு பணிகளுக்காக செலவாகும் நிதி, இதனை விடவும் இரு மடங்காக அதிகரிக்கலாமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நிலைமை “உண்மையில் பேரழிவு” என ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான உலக வங்கியின் துணைத் தலைவர் Anna Bjerde தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கங்களினால் துருக்கியில் பதிவாகியுள்ள சேத மதிப்பீடு 34.2 பில்லியன் டொலர் என்பது 2021 ஆம் ஆண்டில் அந்நாட்டின் பொருளாதார உற்பத்தியில் 4 வீதத்திற்கு சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 06ஆம் திகதி துருக்கி மற்றும் சிரிய எல்லையில் பதிவாகிய 7.8 மற்றும் 7.5 மெக்னிடியூட் அளவிலான பாரிய இரு நிலநடுக்கங்களிலும் சிக்கி 44,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இரு நிலநடுக்கங்களையும் தொடர்ந்து 7,500 இற்கும் மேற்பட்ட அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....