யாழ். மாநகர சபைக்கு புதிய மேயரை தெரிவு செய்ய தீர்மானம்

Date:

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் புதிய மேயரை தெரிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனின் கையொப்பத்துடன், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ். மாநகர சபைக்கான புதிய மேயரை தெரிவு செய்வதற்கான கூட்டம், எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த ஜனவரி 21 ஆம் திகதி யாழ். மாநகர சபை மேயராக முன்னாள் மேயர் இம்மானுவல் ஆர்னோல்ட் கடமைகளை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

70 இலட்சம் ரூபா பணம் கொள்ளை !

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக...

பல்பொருள் அங்காடிகளில் புதிய விதிமுறைகள்

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளில் அதன் பணியாளர்கள் தொடர்பில் புதிய...

ஜவான் 1000 கோடி வசூலா !!!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் திகதி திரையரங்குகளில்...

19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள்...