மயிரிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்

Date:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் படப்பிடிப்பு தளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

குறித்த விபத்து ஏ.ஆர்.அமீனின் பாடல் ஒன்றுக்கான படப்பிடிப்பு இடம்பெற்ற தளத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இதன்போது, படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தளமும், அலங்கார விளக்குகளும் அறுந்து விழுந்துள்ளன.

எனினும், தான் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் உயிர்தப்பியதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.அமீன் பகிர்ந்துள்ளார்.

குறித்த அந்த பதிவில்,

இன்று நான் பாதுகாப்பாக உயிருடன் இருப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் என் ஆன்மீக ஆசிரியருக்கும் நன்றி.

மூன்று இரவுகளுக்கு முன் நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன். கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தியபோது, பொறியியல் மற்றும் பாதுகாப்பை குழு கவனித்துக்கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன்.

நான் அந்த இடத்தின் நடுவில் இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செட் மற்றும் சரவிளக்குகள் கீழே விழுந்தன. சில அங்குலங்கள்.

சில வினாடிகளில் மேடை செட் எங்கள் தலையிலேயே விழுந்திருக்கும். நானும் எனது குழுவினரும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....