இந்திய 12 மீனவர்கள் விடுதலை !

நாகை, மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
குறித்த மீனவர்கள் சென்ற படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பருத்தித்துறை நீதிமன்ற நிபந்தனைகளுடன் 12 பேரையும் விடுதலை செய்துள்ளது.
விடுதலை செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.