# Tags
#இலங்கை

மண்ணெண்ணெய் விலை குறைப்பு- வெளியானது அறிவிப்பு

மண்ணெண்ணெய் விலையை குறைக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் யோசனைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய, இன்று (01) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மண்ணெண்ணெய் புதிய விலை 305 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழிற்சாலைகளுக்கான மண்ணெண்ணெய் 134 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலையாக 330 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.