உணவு என்ற போர்வையில் கஞ்சா விநியோகித்த குடு சலிந்துவின் சகா கைது!

Date:

போதைப்பொருள் வர்த்தகரான குடு சலிந்துவின் நெருங்கிய சகா ஒருவர் நேற்று விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

விசேட அதிரடிப்படைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவு III இன் அதிகாரிகளால், பாணந்துறை – ஹொரண வீதியில், 33 வயதுடைய குறித்த நபர், 10 கிலோகிராம் கஞ்சா மற்றும் ஒரு இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் உணவு விநியோகம் என்ற போர்வையில் குறித்த போதைப்பொருட்களை உந்துருளியில் கொண்டு சென்றுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் பாணந்துறையில் போதைப்பொருள் வலையமைப்பைக் கையாண்டவர் எனவும் பாதாள உலகக்குழு உறுப்பினர் குடு சலிந்துவின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்துநராகவும், தற்போது துபாயில் இருப்பதாக கூறப்படும் பெலியத்த ரணாவின் நிதி விவகாரங்களையும் கையாண்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...