கண்டியை உலுக்கிய விபத்து – பாடசாலை மாணவன் பலி!

Date:

கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (மார்ச் 26) பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் 16 வயதுடைய இளைஞன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கண்டி மடபோவல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த மாணவர் தனது கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டு பாதசாரிகள் பயணிக்கும் மேம்பாலத்தை பயன்படுத்தாமல் புகையிரத தண்டவாளத்தை கடந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவியின் சடலம் கண்டி போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...