விவசாய அதிகாரி கொலை- “டேனி பேபி” கைது!

Date:

இன்று காலை (27) தங்காலை பொலிஸ் பிரிவில் வெலியார-நெதொல்பிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 30 வயதான  என்ற அப்பகுதியில் விவசாய ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்த திருமணமான பெண் என தெரியவருகிறது.

உயிரிழந்த பெண் தான் வசிக்கும் அதே பகுதியில் பணிபுரிந்து வந்ததோடு, இன்று வீட்டில் இருந்து வயல் பணிக்காக சென்றுக்கொண்டிருந்த போது, ​​நேற்று முன்தினம் ஏற்பட்ட பணி பிரச்சனை காரணமாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 41 வயதான ஜயவர்தன பத்திரனகே சரத் எனப்படும் ‘டேனி பேபி’ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தங்காலை நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...