அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதல் : தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரயில் நிலையம் உள்ளது.
இந்த ரயில் நிலையத்திற்கு நேற்று (28) வந்த நபர் ரயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த தகவலை அறிந்த பொலிஸார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது, அந்த நபர் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டுக்கொன்றனர்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் மூலம் குறித்த நபர் இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் முகமது ரஹ்மதுல்லா சயது அகமது (வயது 32) என்பதும் தெரியவந்துள்ளது.
தற்காலிக விசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த அகமது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது குறித்த இரண்டாம் கட்ட விசாரணையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.