3ஆவது மாடியிலிருந்து விழுந்து மீனவர் மரணம்!

Date:

மொரட்டுவ-சயுருபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்தனர்.

சயுருபுர வீட்டுத் தொகுதியின் மூன்றாவது மாடியில் வசித்து வந்த ரசிக சம்பத் மார்ட்டின் (24) என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி மற்றும் பெற்றோரிடமிருந்து கிடைத்த தகவலின்படி, உயிரிழந்தவர் அதிகாலை 2 மணியளவில் மரண இல்லத்திற்குச் செல்வதற்காக கூறிவிட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் இரவில் வீட்டிற்கு வரும்போது வீட்டிலுள்ளவர்களின் நித்திரைக்கு பாதகம் ஏற்படாதவாறு, மூன்றாவது மாடியின் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த தினம் வழக்கம் போல் ஜன்னல் வழியாக வீட்டுக்கு வரும்போது விபத்துக்குள்ளானாரா அல்லது அப்படி ஏதும் இல்லையென்றால் கொலையா என்பது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்கள் அணி அசத்தல்..!

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது....

3-வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு...

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர்...

5 புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

  ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் 5 புதிய பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   ஜனாதிபதி...