வெளிநாட்டவரின் 7 இலட்ச ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு!

கண்டியிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த நோர்வே நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் ஏழு இலட்ச ரூபா பெறுமதியான உடைமைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த ‘ட்ரோன்’ கெமரா உட்பட பல பொருட்கள் கொண்ட பயணப் பொதியே இவ்வாறு இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் ரயில் தரித்து நின்ற போது குறித்த பொதி திருடப்பட்டிருக்கலாம் என சுற்றுலாப் பயணி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
மேற்படி பயணப் பொதியில் 25 000 ரூபா பணம், ட்ரோன் கெமரா, ஸமார்ட் தொலைபேசி உட்பட பல விலை உயர்ந்த பொருட்கள் அந்த பொதிக்குள் இருந்ததாக அவர் தனது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுற்றுலா பொலிஸார் மற்றும் நாவலப்பிட்டி பொலிஸார் இணைந்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாணைகளை மேறகொண்டுள்ளனர்.