நடு வீதியில் பெண் படுகொலை!

Date:

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இபலோகம – ஹிரிபிட்டியாகம பிரதேசத்தில் இன்று (08) அதிகாலை பதிவாகியுள்ளது.

ஹிரிபிட்டியாகம – மைலகஸ்வெவ பிரதேசத்தில் வசித்து வந்த ஏ.எம்.சமந்திகா அதிகாரி என்ற 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹிரிபிட்டியாகம பிரதேசத்தில் உள்ள தேங்காய் தொடர்பான தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் இன்று அதிகாலை 05.00 மணியளவில் பணிக்கு சென்றுள்ளார்.

அப்போது, ​​ஹிரிபிட்டியாகம பிரதேசத்தில் கிளை வீதியில் வைத்து நபர் ஒருவரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண்ணின் மூத்த மகளும் அவள் வேலை செய்யும் அதே இடத்தில் வேலை செய்கிறாள், எனவே அவளும் தனது வீட்டிலிருந்து இந்த வழியில் வந்திருக்கிறாள்.

அப்போது, ​​காயங்களுடன் வீதியில் கிடந்த தனது தாயை பார்த்து, அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத் தகராறு இருந்ததாகவும், இது தொடர்பில் இப்பலோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் இருப்பதாகவும் இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பெண் மைலகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீட்டிலிருந்து தனது இளைய பிள்ளையையும் அழைத்துக்கொண்டு தனது சகோதரனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அவரது கணவரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் இப்பலோகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....