அனைத்து போர்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

Date:

கிறிஸ்த மத பண்டிகையான ஈஸ்டர் இன்று கிறிஸ்தவ மதத்தினரால் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்களில் வழிபாட்டுகள் நடைபெற்று வருகிறது.

வாடிகனில் புனித பீட்டர் ஆலையத்தில் நடைபெற்ற வழிபாட்டில் போப் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். அப்போது கத்தோலிக்கத்தை தழுவிய 8 வயது சிறுவனுக்கு அவர் ஞானஸ்தானம் செய்தார்.

இதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், உலகில் நடைபெற்றுவரும் போர்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்தார். மேலும் 2022 பிப்ரவரியில் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனையும் அந்நாட்டு மக்களையும் “தியாகி” என்று குறிப்பிட்டார்.

உறுதியான மற்றும் நம்பிக்கையான குரலில் தனது உரையைப் படித்த பிரான்சிஸ், நம்பிக்கையின் ஊற்று வறண்டுவிட்டதாக மக்கள் உணர்ந்தாலும், தோல்வியின் உணர்வில் உறைந்து போகாமல், கடவுளின் உதவியுடன் “உள் எழுச்சியை” தேடுவது முக்கியம் என்று கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....