5 நாட்களில் வாகன விபத்துக்களால் 25 பேர் பலி!

Date:

பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் இவ்வாறான வாகன விபத்துக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 5 நாட்களில் 270 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் வாகனங்களை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எனவே, அதனை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களும், சாரதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மது போதையில் வாகனம் செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

சாரதிகள் உரிய வீதி விதிகளை கடைப்பிடித்து, வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ அறிவுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....