நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாபெரும் நடன போட்டி

Date:

பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பொருநை நடனப் போட்டி (பரதநாட்டியம் &கிராமிய நடன போட்டிகள் )நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.

போட்டிகளை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி துவங்கி வைத்தார். பரதம், மற்றும் கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை)போன்ற நடனங்களை முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஐந்து வயது முதல் இருபது வயது வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் .

மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியின் நடுவர்களாக கலா ரத்தினம் சிவகாமி, கலை வளர்மணி கல்யாணி ,சுப துர்கா நெல்லையப்பன், கலை ஆசிரியை சொர்ணம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பேராசிரியை பிரியதர்ஷினி ஆகியோர் இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் தமிழ் புத்தாண்டு அன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....