அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்

Date:

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை தொடர்பில் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்கவுக்குச் சொந்தமான பண்ணை ஒன்றிற்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (01) குருநாகல் மாவட்டத்தின் கொபேகனே, மிரிஹானேகம, ஔலேகம மற்றும் பிங்கிரிய பிரதேசங்களில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்வது தொடர்பான சோதனைகள் நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டன.

அங்கு கொபேகனே பகுதியில் நடத்தப்பட்டு வந்த சரத் ரத்நாயக்க என்பவருக்குச் சொந்தமான முட்டைப் பண்ணையில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்டதை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று பண்ணைகளுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்கள் அணி அசத்தல்..!

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது....

3-வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு...

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர்...

5 புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

  ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் 5 புதிய பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   ஜனாதிபதி...