2022 ஆம் ஆண்டின் அதி சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான FIFA விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி

Date:

2022 ஆம் ஆண்டின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை அர்ஜென்டின அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி வென்றார்.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்த விருது வழங்கல் விழா பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்றது.

நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்கள் , பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் விருது வழங்கல் விழாவில் பங்கேற்றனர்.

பிரேஸிலின் புகழை உலகறியச் செய்த புகழ்பூத்த கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேவுக்கு இதன்போது விசேட விருது பரிசளிக்கப்பட்டது.

பேலேவின் மனைவி இந்த விருதைப் பெற்றுக்கொண்டதுடன், பிரேஸிலின் முன்னாள் நட்சத்திரமான ரொனால்டோ இந்த விருதை அவருக்கு வழங்கினார்.

ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்வுகள் கண்களுக்கு விருந்து படைத்தன.

உலக சம்பியனான அர்ஜென்டினாவின் Lionel Scaloni ஆண்டின் அதிசிறந்த பயிற்றுநருக்கான விருதை வென்றார்.

ஆண்டின் அதிசிறந்த வீராங்கனைக்கான விருதை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் ஸ்பெய்னின் Alexia Putellas வெற்றிகொண்டார்.

உலக சம்பியனான அர்ஜென்டின அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி ஆண்டின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதுக்கு பாத்திரமானார்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்கள் அணி அசத்தல்..!

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது....

3-வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு...

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர்...

5 புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

  ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் 5 புதிய பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   ஜனாதிபதி...