இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து : 9 பேர் மாயம் -ஒருவர் பலி

Date:

இந்தோனேஷியாவில் கடலில் படகு கவிழ்ந்து ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மீன் பிடிக்க சென்றிருந்த மேலும் 9 பேர் காணாமல் போயுள்ளனர். தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா நில நடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதி ஆகும்.

இங்குள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று மீன் பிடிக்க மீனவர்கள் பலர் தங்களது படகுகளில் சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியதால் அலையின் வேகம் அதிகரித்தது.

இதனால் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தவர்கள் உடனே கரை திரும்புமாறு அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டிருந்தது.

இருப்பினும் இந்த அதிக அலை காரணமாக மீன் பிடிக்க சென்றிருந்த ஒரு படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படகில் இருந்த ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். மீன் பிடிக்க சென்றிருந்த மேலும் 9 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதனால் பலியானோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....