“குடு அஞ்சு”வுக்கு உதவிய தம்பதியினர் கைது

Date:

டுபாயில் தலைமறைவாகியுள்ள “இரத்மலானை குடு அஞ்சு”வின் பண விவகாரங்களை நிர்வகித்த கணவன் மனைவி தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 14 இலட்சம் ரூபா பண கையிருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துருகிரிய-ஒருவல பிரதேசத்தில் இரண்டு மாடி கொண்ட சொகுசு வீட்டில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் “இரத்மலானை குடு” அஞ்சுவின் உறவினர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் சென்று போதைப்பொருள் வியாபாரிகளிடம் பணம் வசூலித்ததாகவும், பின்னர் அதற்காக சொகுசு காரை குடு அஞ்சு கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் மனைவி போதைப்பொருள் மூலம் சம்பாதித்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான கணவன் மற்றும் மனைவி தம்பதியினர் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 2021 ஜூன் 03 அன்று அதுரிகிரிய பிரதேசத்தில் வைத்து அத்துரிகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2020ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் T-56 துப்பாக்கி மற்றும் உயிருள்ள தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய தம்பதிகள் 26 மற்றும் 32 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதனை படைத்த நாஸா (NASA)

ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின்...

70 இலட்சம் ரூபா பணம் கொள்ளை !

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக...

பல்பொருள் அங்காடிகளில் புதிய விதிமுறைகள்

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளில் அதன் பணியாளர்கள் தொடர்பில் புதிய...

ஜவான் 1000 கோடி வசூலா !!!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் திகதி திரையரங்குகளில்...