“குடு அஞ்சு”வுக்கு உதவிய தம்பதியினர் கைது

Date:

டுபாயில் தலைமறைவாகியுள்ள “இரத்மலானை குடு அஞ்சு”வின் பண விவகாரங்களை நிர்வகித்த கணவன் மனைவி தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 14 இலட்சம் ரூபா பண கையிருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துருகிரிய-ஒருவல பிரதேசத்தில் இரண்டு மாடி கொண்ட சொகுசு வீட்டில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் “இரத்மலானை குடு” அஞ்சுவின் உறவினர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் சென்று போதைப்பொருள் வியாபாரிகளிடம் பணம் வசூலித்ததாகவும், பின்னர் அதற்காக சொகுசு காரை குடு அஞ்சு கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் மனைவி போதைப்பொருள் மூலம் சம்பாதித்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான கணவன் மற்றும் மனைவி தம்பதியினர் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 2021 ஜூன் 03 அன்று அதுரிகிரிய பிரதேசத்தில் வைத்து அத்துரிகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2020ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் T-56 துப்பாக்கி மற்றும் உயிருள்ள தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய தம்பதிகள் 26 மற்றும் 32 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....