விருதுநகர் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி வெடி விபத்து

Date:

விருதுநகர் மாவட்டம் வி.ராமலிங்கபுரம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனிடையே விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வபோது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இன்று பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்த போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பட்டாசு ஆலையில் வெடி தயாரிக்கும் அறையின் மீது மின்னல் தாக்கி வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் அங்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 55 வயது பெண் தொழிலாளர் புஷ்பம் என்ற பெண் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் பட்டாசு ஆலைக்கு விரைந்து வந்து தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உக்ரைன் தாக்குதலில் ரஷிய கடற்படை தளபதி கொல்லப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும்...

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு...

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கிணற்றில் வீசிய சிறுவர்கள்

இந்தியாவின் சித்தூர் மாவட்டம், பென்முருவைச் சேர்ந்த பவ்யா ஸ்ரீ என்ற சிறுமி...

பெண் ஒருவரை கடத்தி கப்பம் கோரல் !

பெண்ணொருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள்...