குதிரை சவாரி செய்த பிரபஞ்ச அழகி இறுதி போட்டியாளரின் சோக மரணம்

Date:

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாடல் அழகி சியன்னா வெயிர் (வயது 23). 2022-ம் ஆண்டு நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொண்ட அவர், இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டவர்.

கடந்த ஏப்ரல் 2-ம் திகதி ஆஸ்திரேலியாவில் வின்ட்சார் போலோ கிரவுண்டில் குதிரை சவாரி மேற்கொண்டார்.

அப்போது, அவரது குதிரை திடீரென சரிந்து, விழுந்து உள்ளது.

சியன்னாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு, வெஸ்ட்மீட் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பல வாரங்களாக உயிர் காக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், அதில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், உயிர் காக்கும் சிகிச்சையை எடுத்து விடும்படி அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, அவர் உயிரிழந்து உள்ளார்.

ஆங்கில இலக்கியம் மற்றும் உளவியல் பாடங்களில் இரட்டை பட்டப்படிப்பை படித்து உள்ள அவர், 3 வயது இருக்கும்போது, குதிரை சவாரி செய்ய தொடங்கினார்.

இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த அவர், அந்நாட்டில் தனது பேஷன் தொழில் மற்றும் சமூக நெட்வொர்க்கை தொடர போகிறேன் என உள்ளூர் ஊடகங்களிடம் கூறினார்.
எனது சகோதரி, உறவினர்களுடன் அதிக நேரம் செலவிட போகிறேன் என்றும் கூறினார்.
அவரது சோக மரணம் நடந்து உள்ளது. அவரது மறைவுக்கு தோழிகள், குடும்பத்தினர் மற்றும் மாடல் தொழிலில் உள்ள நண்பர்கள் சமூக ஊடகம் வழியே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உக்ரைன் தாக்குதலில் ரஷிய கடற்படை தளபதி கொல்லப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும்...

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு...

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கிணற்றில் வீசிய சிறுவர்கள்

இந்தியாவின் சித்தூர் மாவட்டம், பென்முருவைச் சேர்ந்த பவ்யா ஸ்ரீ என்ற சிறுமி...

பெண் ஒருவரை கடத்தி கப்பம் கோரல் !

பெண்ணொருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள்...