காலிஸ்தானிய பயங்கரவாத அமைப்பின் கிளையாக பஞ்ச்வார் குழு உள்ளது. இந்த குழுவின் தலைவனாக பரம்ஜித் சிங் பஞ்ச்வார் (வயது 63) செயல்பட்டு வந்தார். பரம்ஜித் சிங்கை இந்தியா பயங்கரவாதியாக அறிவித்துள்ளார். இவர் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வந்தார்.
பரம்ஜித் சிங் நேற்று காலை தனது வீட்டில் இருந்து நடைபயிற்சிக்காக வெளியே சென்றார். நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் பயங்கராவாதி பரம்ஜித் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காலிஸ்தான் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.