திருமண விழாவில் நடனமாடிய நபர் திடீரென மாரடைப்பால் மரணம்

Date:

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தை சேர்ந்த திலீப் ராவுஸ்கர் என்பவர், மின்சார துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த மே 5ஆம் திகதி அன்று, தனது மருமகளது திருமணத்திற்கு சென்றுள்ளார்.

இரவில் நடைபெற்ற அவ்விழாவில், மணமக்கள் உட்பட அனைவரும், கொண்டாட்டத்தில் நடனமாடியுள்ளனர். அப்போது உற்சாகமடைந்த திலீப் ராவுஸ்கர், அவர்களோடு சேர்ந்து நடனமாடியுள்ளார்.

தொடர்ந்து உறவினர்களோடு நடனமாடிக் கொண்டிருந்த திலீப்புக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மேடையில் ஆடிக் கொண்டிருந்த அவர் திடீரென உட்கார்ந்து, சில நிமிடங்களில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடையவே, உடனே திலீப்பை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திலீப் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேடையில் திலீப் நடனமாடுவதும், திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

இந்நிலையில் திருமண நிகழ்வில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இத்துயர் மரணத்தால், மண விழாவில் இருந்த உறவினர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....