களுத்துறை மாணவியின் மரணம் குறித்த முக்கிய தீர்மானம்

Date:

களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவியின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளில் அவர் தங்கியிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொலிஸாரின் விசாரணைகளின் போது, ​​உயிரிழந்த மாணவிக்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து கடைசி தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவருக்கும் குறித்த மாணவிக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மனைவி கொலை கணவருக்கு மரண தண்டனை !

எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை...

ஹசரங்கவுக்கு பதில் துஷான் ஹேமந்த

வனிந்து ஹசரங்க காயத்தில் இருந்து மீண்டு வருவதால் ஐசிசி கிரிக்கெட் உலகக்...

உக்ரைன் தாக்குதலில் ரஷிய கடற்படை தளபதி கொல்லப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும்...

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு...