சுப்மன் கில் அதிரடி சதம் – சன்ரைசர்ஸ் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ்!

Date:

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசஸ்ர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க வீரர் ரித்திமான் சாகா டக் அவுட் ஆகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

இவருடன் களமிறங்கிய சுப்மன் கில் துவக்கம் முதலே அதிரடியாக ஆடிவந்தார். இவர் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து 47 ரன்களில் ஜன்சென் பந்தில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 8 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

பின் களமிறங்கிய டேவிட் மில்லர் 7 ரன்களையும், ராகுல் தேவாட்டியா 3 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். தசுன் ஷனுகா 9 ரன்களை எடுத்தார். ரஷித் கான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டனஸ் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்களை வீழ்த்தினார். மார்கோ ஜன்சென், ஃபசல்ஹக் ஃபரூக்கி, நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....