உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது குண்டு வீசிய ரஷ்யா

Date:

போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் ரஷ்யா நடத்திய போர் குற்றங்கள் குறித்து பிரித்தானியாவின் முன்னணி வழக்கறிஞர் கேட்ரியோனா முர்டோக் கடந்த சில மாதங்களாக உக்ரைனில் விசாரணை நடத்தி வருகிறார்.

வழக்கறிஞர் கேட்ரியோனா முர்டோக் மற்றும் மனித உரிமைகள் சட்ட நிறுவனம் குளோபல் ரைட்ஸ் இணைந்து உக்ரைனிய மக்களை பசியில் தள்ள உணவு உட்கட்டமைப்பை ரஷ்ய ராணுவம் திட்டமிட்ட தாக்குதல் நடத்தியதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிட்டத்தட்ட 6 மாதங்களாக உணவு பசி மீது விசாரணை நடத்தி வரும் கேட்ரியோனா முர்டோக் மற்றும் அவரது குழு போர் நடைபெறும் உக்ரைனில் வளர்ந்து வரும் இருண்ட வடிவத்தை கண்டுபிடித்துள்ளனர்.

அதில் உக்ரைனில் உள்ள உணவு தொழிலை ரஷ்யா கொள்ளையடித்து வருவதாகவும், உக்ரைனிய பகுதிகளில் இருந்து வரும் மனிதாபிமான உதவிகளை ரஷ்யா தடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உணவு உதவி பொருட்களை வாங்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் 14 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்தி இருக்கும் போர் குற்றங்கள் தனக்கு கெட்ட கனவுகளை தருவதாக வழக்கறிஞர் கேட்ரியோனா முர்டோக் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....