தந்தையிடமிருந்து தாயை காப்பற்ற சென்ற மகளுக்கு நேர்ந்த கதி

Date:

அக்மீமன பிரதேசத்தில் கணவரால் மனைவி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மகள் மீது விழுந்ததில் 14 வயது மகள் பலத்த காயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலஹந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் மனைவி கோணமுல்ல பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய போது கணவன் மோட்டார் சைக்கிளில் ஏறி வீட்டை விட்டு செல்வதற்கு தயாராக இருந்துள்ளார்.

அப்போது, ​​மகளை பயிற்சி வகுப்புக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதால், மோட்டார் சைக்கிளை எடுக்க வேண்டாம் என மனைவி கூறியுள்ளார்.

சந்தேகநபர் அருகில் இருந்த தடியை எடுத்து மனைவியை தாக்க முற்பட்ட போது, ​​மகள் தாயை காப்பாற்ற முன்வந்துள்ளார்.

சந்தேக நபர் மகளின் மார்பில் தடியால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...