ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

Date:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மலைப்பகுதி மாவட்டங்களான தோடா மற்றும் கிஷ்த்வாரில் நேற்று 5.4 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்படது. இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் காயம் அடைந்தனர். முன்னெச்சரிக்கை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை அப்பகுதிகளில் மீண்டும் அடுத்தடுத்து நான்கு முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

நிலஅதிர்வு ஏற்பட்ட இடங்கள்

1. இன்று காலை 8.29 மணியளவில் கிஷ்த்வாரில் 3.3 ரிச்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது

2. தோடாவில் 7.56 மணியளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இவை இரண்டும் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக நிலஅதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.

3. 2.20 மணியளவில் 4.3 ரிச்டர் அளவில் தோடா மாவட்டத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது

4. ரியாசி மாவட்டம் கிழக்கு கத்ராவில் இருநது 74 கி.மீட்டர் தொலைவில் 2.8 ரிச்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

நேற்று 5.4 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து இன்று அதிர்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இதுபோன்று சிறிய சிறய அதிர்வுகள் வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்ட வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....