நாட்டில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக உள்நாட்டு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றமே, தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு காரணம் என குறித்த வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தநிலையில், கொழும்பில் இன்று 22 கரட் தங்கத்தின் விலை 155,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
முன்னதாக (கடந்த வாரம்) 22 கரட் தங்கத்தின் விலை 147,000 ரூபாவாக காணப்பட்டது.
அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை இன்று 175,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
முன்னதாக 24 கரட் தங்கத்தின் விலை 160,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.