கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் போக்குவரத்து, தபால் அமைச்சர் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது குறித்தும், புகையிரத சேவையை நவீனமயப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், தபால் சேவையில் நியமனம் பெற்ற பெருந்தோட்ட இளைஞர்கள் அடிப்படை சம்பள விகிதத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் எனவும், அப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க கவனம் செலுத்துமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பந்துல குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஒப்புக்கொண்டதுடன், அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தையும் கையளித்தார்.