மட்டக்களப்பு – வாழைச்சேனை, நாவலடி பிரதேசத்தில் கோழிச் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் நேற்று (17) கைதுசெய்யப்பட்டனர்.
இதன்போது, 6 சண்டை கோழிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றையும் கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்தது.
நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 26 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களை இன்று நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.