அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து கதிகாமத்திற்கு வழிபாட்டுக்காக சென்று திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே யாத்திரிகர்கள் பேருந்து வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.