மேற்கு வங்காளத்தில் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

Date:

மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.

அவர்களில் ஒருவர் பழைய மால்டா நகரிலும், மற்ற 6 பேர் கலியாசக் பகுதியிலும் உயிரிழந்தனர். அவர்கள் கிருஷ்னோ சவுத்ரி (வயது 65), உம்மி குல்சும் (வயது 6), தேபோஸ்ரீ மண்டல் (வயது 27), சோமித் மண்டல் (வயது 10), நஜ்ருல் எஸ்.கே. (வயது 32), ரோபிஜன் பீபீ (வயது 54) மற்றும் ஈசா சர்க்கார் (வயது 8) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இதுதவிர, 9 கால்நடைகள் மின்னல் தாக்கி உயிரிழந்து உள்ளன. மால்டா நகரில் பங்கிதோலா பகுதியருகே உயர்நிலை பள்ளியொன்றில் பள்ளி நேரத்தின்போது மின்னால் தாக்கியதில், 12 மாணவ மாணவியர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் பங்கிதோலா கிராமப்புற மருத்துவமனை மற்றும் மால்டா மருத்துவ கல்லூரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என மால்டா மாவட்ட மாஜிஸ்திரேட் நிதின் சிங்கானியா கூறியுள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....