வாஷிங்டனில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் பலி

Date:

அமெரிக்கா டகோமாவில் இருந்து ‘எஸ்ஆர் 509’ நெடுஞ்சாலையில் வெள்ளைநிற எஸ்யுவி ரக கார் ஒன்று வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது இந்த கார் சாலையைக் கடக்க முயன்ற வேறொரு காரின்மீது பயங்கரமாக மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் பலமுறை உருண்டு சாலை ஓரம் சென்று நின்றது.

5 பேர் பயணிக்கக்கூடிய அந்த உருண்டோடிய காரில் 7 பேர் பயணித்துள்ளனர். அதில் 6 பேர் பரிதாபமாகப் பலியாகினர். மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. எஸ்யூவி காரில் இருந்த 2 பேர் நலமுடன் உள்ளனர்.

இருப்பினும் விபத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. இதனை கண்டறியப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் விபத்தின் போது பயணிகள் சீட் பெல்ட் அணிந்திருந்தார்களா? என்பதைக் கண்டறியும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....