இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் நமாமி கங்கை திட்ட தளத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று அதிகாலை இங்கு 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
அப்போது மின்மாற்றி வெடித்து சிதறியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதில் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததோடு மேலும் பலர் காயமடைந்து உள்ளனர்.
காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமோலி பொலிஸ் அதிகாரி பர்மேந்திர தோவல் தெரிவித்துள்ளார்.




