‘டில்மா’ தேயிலை நிறுவனர் மெரில் ஜே. பெர்னாண்டோ தனது 93 ஆவது வயதில் இன்று காலமானார்.
இது தொடர்பில் அவரது புதல்வர் மலிக் ஜே. பெர்னாண்டோ டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
அவர் (மெரில் ஜே.பெர்னாண்டோ) நம் வாழ்வில் ஒரு உயர்ந்த நபராக இருந்தார். அவர் எங்களை விட்டுப் பிரிவார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை.
எனது சகோதரனும் நானும், எங்கள் குழந்தைகளும் அவருடைய பாரம்பரியத்தை வலுப்படுத்தவும் அவரது பணியை மேலும் மேம்படுத்தவும் உறுதியளிக்கிறோம்.
தந்தையின் இறுதிச் சடங்கு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.