உலகின் மிகப்பெரிய இராணுவ கூட்டணியான நேட்டோவில் இணைவதற்காக பெலாரசில் முயற்சி செய்து வருகிறது.
இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.
இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் களமிறங்கின. அவை உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இதன்மூலம் ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் சமாளித்து வருகிறது.
இந்தநிலையில் ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள நாடுகளின் பட்டியலில் தற்போது அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.
அதன்படி ரஷ்யாவில் உள்ள 35 நிறுவனங்கள், முன்னாள் துணை பிரதமர்கள் ஆண்ட்ரே பெலோசோவ், டிமிட்ரி செர்னிஷென்கோ மற்றும் பெலாரசில் உள்ள இராணுவ உயர் அதிகாரிகள் என 10 தனிநபர்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.