பேரே வாவியிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

Date:

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிற்றம்பலம் கார்டினர் மாவத்தைக்கு அருகில் உள்ள பேரே வாவியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், உயிரிழந்தவர் 45 மற்றும் 50 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உயிரிழந்தவர் 05 அடி 03 அங்குல உயரம் கொண்ட ஆண் எனவும், வெளிர் நீல நிற அரை கை , செக் சட்டை மற்றும் நீல நிற நீளமான பொட்ஹம் காற்கட்டையும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.

 

கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...