பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்த பக்கத்து வீட்டு இளைஞன்

Date:

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் வீடு ஒன்றில் மலசலகூடம் சென்ற முதிய பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை அறுத்துவிட்டு எடுத்துக் கொண்டு அவரை தள்ளி கீழே வீழ்த்தி விட்டு தப்பி ஓடிய அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள இளைஞன் ஒருவரை கைது செய்த சம்பவம் நேற்று (26) மாலை இடம் பெற்றுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரிய வருவதாவது,

இருதயபுரம் மேற்கு 8 ஆம் பிரிவிலுள்ள முதியவரான பெண் ஒருவர் தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சம்பவதினமான நேற்று 4.30 மணியளவில் சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டின் வெளிபகுதியிலுள்ள மலசலகூடம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞன் ஒருவன் அவரின் கழுத்திலிருந்த 1 1/2 பவுண் தங்க சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு அவரை கீழே வீழ்த்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து வீட்டில் பொருத்தப்பட்ட சிசிரி கமரா மூலம் குறித்த கொள்ளையனை அடையாளம் கண்டுகொண்ட பொலிஸார் கொள்ளையடிக்கப்பட்டவரின் வீட்டில் இருந்து 4 ஆவது வீட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்த தங்க சங்கிலியை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....