குளவி கொட்டுக்கு இலக்கான 17 மாணவர்கள் வைத்தியசாலையில்

Date:

மதவாச்சி, கடவத்கம பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கடவத்கம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மேலதிக வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த பாடசாலையில் இருந்த குளவிக்கூட்டை குரங்குகள் கலைத்ததன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

தாக்குதலில் காயமடைந்த மாணவர்களில் 10 ஆண் பிள்ளைகளும் 7 பெண் பிள்ளைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை காயமடைந்த மாணவர்கள் 11 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட , கடவத்கம பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிய வந்துள்ளது.

 

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மதவாச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....