பண்டாரகம கம்புருகுடா பகுதியில் லொறி ஒன்று இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மில்லனிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் ஆசிரியை ஒருவருமே காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிவேகமாக பயணித்த லொறி முந்திச் செல்ல முற்பட்ட வேளை, இரண்டு மோட்டார் சைக்கிள்களுடனும் மோதியுள்ளது.
இதன்போது கான்ஸ்டபிள் மோட்டார் சைக்கிளுடன் அருகில் இருந்த வாய்க்காலில் தூக்கி வீசப்பட்டதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த கான்ஸ்டபிள் மற்றும் ஆசிரியையும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.