கேகாலை மாவட்டத்தில் தரை மட்டத்திலிருந்து சுமார் 124 மீற்றர் ஆழத்தில் போகல மினிரன் சுரங்கத்தில் உணவகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
போகல மினிரன் சுரங்கம் என்று அழைக்கப்படும் “விஜயபால மலலசேகர” சுரங்கத்திலேயே குறித்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தில், ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து உணவருந்தலாம். மேலும், இந்த மினிரன் சுரங்கத்தை பார்வையிட சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
அதேபோல், 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் நுழைய அனுமதியில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.