இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் சசித்ர சேனாநாயக்க மீது ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்குமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
38 வயதான அவர், 2020 ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கின் முதல் சீசனில் பங்கேற்கும் இரண்டு கிரிக்கெட் வீரர்களை தொலைபேசி அழைப்புகள் மூலம் அணுகி, போட்டியின் போது ஆட்ட நிர்ணயம் செய்ய தூண்டியதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.